இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவினை சந்திக்க வேண்டும் எனற நீண்ட நாள் கனவினைக் கொண்டிருந்த உலகளாவிய ரீதியில் ரசிகர்களை கொண்டு இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரித்தி மன்தனாவின் கனவு நிஜமாகியுள்ளது.
அவர் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் குமார் சங்கக்காரவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
“எனது மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவதென தெரியவில்லை. இந்த மகிழ்ச்சி எனது வாழ்நாள் முழுவதும் இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
