சிறுவர் மற்றும் மகளிர் விவகார முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய உரை தொடர்பில், எடுக்கப்படவேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து ஆராய்வதற்கு, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதியாக, மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ஒருவரை சட்டமா அதிபர் நியமித்துள்ளார்.
அண்மையில் யாழ். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், “தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், எப்படி இருந்தோம் என்பதை உணர்வுபூர்வமாக உணரும் நிலையில் இருக்கிறோம். இன்றுள்ள நிலையில் விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டியதே எமது முக்கிய நோக்கம்” என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
R.Rishma