இலங்கை அரசினால் விற்கப்படும் எந்தவொரு சொத்தினையும் விலைக்கு வாங்க வேண்டாமென சர்வதேசத்திடம் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமது அரசு வந்ததன் பிற்பாடு குறித்த சொத்துக்கள் குறித்து அவதானம் செலுத்தப்படுவதாகவும் மக்கள் சார்பில் தான் தெரிவிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் நேற்று(02) நடாத்தப்பட்ட ‘மக்கள் சக்திப் படை’ மக்கள் பேரணியின் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.