முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளது என சீன கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச துணை அமைச்சர் Guo Yezhou கடந்த 03ம் திகதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜி.ஏல்.பீரிஸை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதன் போதே மேலதிக பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம், மஹிந்தவின் தலைமையிலான கட்சியுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
மேலும் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த இலங்கை முன்னைய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரி பாராட்டியுள்ளார் என்றும் ஜி.எல்.பீரிஸ், தெரிவித்துள்ளார்.