தசுன் உடனான திட்டம் மற்றும் உலகக் கிண்ணம் குறித்து திசர வெளிப்படைக் கருத்து…

தசுன் ஷானகவின் வேகமான துடுப்பெடுத்தாட்டத்தினால் சுற்றுலா தென்னாபிரிக்க அணியுடனான நேற்றைய(08) நான்காவது ஒருநாள் போட்டியில் 300 ஓட்டங்களை தாண்ட முடிந்ததாக இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேரா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் இது குறித்து திசர பெரேரா கருத்து தெரிவிக்கையில்;

“உண்மையில் நான் தசுன் வந்ததும் கூறியது, எமது சொட்ஸ் நிறுத்துவது நல்லதல்ல, ஏனென்றால் நாம் இருவரும் நேர்மறையாக துடுப்பெடுத்தாடுபவர்கள், அதனால் நாம் மூன்று ஓவர்களாக கணக்கிட்டு திட்டமிட்டோம், பின்னர் நாம் இலக்கு ஒன்றினை வைத்தோம் , எமது இலக்கு 280, நாம் இருவரும் நன்றாக விளையாடினோம், விசேடமாக, ஆதலால் 300 இலக்காக …

நான் பந்து வீச்சாளர், என்றாலும் எனது கனவு உலகக் கிண்ணத்தினை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவதேயாகும். ஏனெனில் T/20 உலகக் கிண்ணத்தில் நாம் பிரதிநிதித்துவப்படுத்தினோம்..”