கடுவெல தொடக்கம் கொதலாவல அதிவேக நுழைவாயில் வரை வீதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடுவெல – ரன்கடு விகாரையில் இடம்பெறும் எசல பெரஹெரா காரணமாக இன்று(12) மதியம் 12 மணி தொடக்கம் மாலை 02 மணி வரை கடுவெல நகரில் விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் குறித்த நேரத்தில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் சாரதிகளை கோரியுள்ளது.