எதிர்வரும் 22 ஆம் திகதி புனித ஹஜ்ஜுப் பெருநாள்…

துல் ஹஜ் மாதத்துக்கான தலைப் பிறை நாட்டின் பல பாகங்களிலும் நேற்று(12) தென்பட்டுள்ளது.

புனித ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை அறிவித்துள்ளது.

துல்ஹஜ் மாதத்தின் 10 ஆம் நாளான எதிர்வரும் 22 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் தினம் என நேற்று(12) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற பிறை பார்க்கும் மாநாட்டில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.