பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவது தொடர்பில் தீர்மானிப்பதற்காக ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதா? இல்லையா? என்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஒன்றிணைந்த எதிரணியின் கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று(14) இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.