எகிப்து நாட்டின் சினாய் தீபகற்கத்தில், ஐ.எஸ் தீவிரவாதிகள் அந்நாட்டு கப்பற்படையின் கப்பல் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த திடீர் தாக்குதலினால் கரும்புகையால் சூழப்பட்ட அக்கப்பலின் புகைப்படத்தை தீவிரவாதிகள் ட்விட்டரில் பதிவேற்றினர்.
அதிஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என்றும், ஆனால் கப்பற்படையைச் சேர்ந்த பல வீரர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் எகிப்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறினார்.
(riz)