விடுமுறை மாதங்களில் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்த கல்வி அமைச்சு, அமைச்சரவை பத்திரமொன்றை தயாரித்து வருவதாக வௌியாகியுள்ள பொய்யான தகவல்களுக்கு எதிராக கல்வி அமைச்சு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை தாக்கல் செய்துள்ளது.
இன்று(16) முற்பகல் கல்வி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் குறித்த எழுத்து மூல முறைப்பாடு அமைச்சின் சட்டத்தரணி ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.