நிலவும் அவசரகால காலநிலை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இல அறிமுகம்…

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக மத்திய மலைநாட்டில் மேல்கொத்மலை, லக்சபான உள்ளிட்ட சில நீர்த்தேக்கங்களில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்போது அவசரகால சூழ்நிலைகளில் 117 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது