தலைமன்னார் செல்லும் புகையிரதம் மதவாச்சி வரை மட்டு…

புகையிரத மார்க்கத்தில் உள்ள பாலமொன்றின் புனர்நிர்மாணப் பணிகள் காரணமாக கொழும்பு கோட்டை முதல் தலைமன்னாருக்கு இடையிலான புகையிரத சேவையை இன்று(17) முதல் மூன்று மாதங்களுக்கு மதவாச்சி வரை மட்டுப்படுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது புகையிரத சேவை மட்டுப்படுத்தப்படுவதால், தலைமன்னாருக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி மதவாச்சி புகையிரத நிலையத்திலிருந்து விசேட பேரூந்து சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.