புதிய சம்பள ஆணைக்குழுவினால் அரச சேவையில் தற்போது நிலவுகின்ற சம்பள முரண்பாடுகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
புதிய சம்பள ஆணைக்குழுவின் நோக்கம் மற்றும் இலக்கை அரசாங்கம் தௌிவுபடுத்த வேண்டும் என்று அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே கூறினார்.