புத்தளம் ஆனமடுவ – ஆண்டிகம பகுதியிலுள்ள நேற்றிரவு(19) உணவகம் ஒன்றிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நேற்று முன்தினம (18) ஆனமடுவ – ஆண்டிகம பகுதியிலுள்ள ஹோட்டலொன்றுக்குள் நுழைந்த சிலர் அங்கிருந்த உடமைகளை சேதப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.