4,130 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று….

அரச சேவைக்கு 4,130 பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று(20) பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி சமூக பொருளாதார மற்றும் கலாசார ரீதியில் பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

தற்போது அதன் பயன்களை மக்கள் பெற்று வருகின்றனர். பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதும் இந்த வேலைத்திட்டத்தின் ஒரு நடவடிக்கையாகும்.

6,500 பேருக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு காலி பத்தேகம பொது விளையாட்டு மைதானத்தில் பிரதமர் தலைமையில் நாளை(21) இடம்பெறவுள்ளது.