வரட்சியினால், சுமார் 05 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு…

நாட்டில் 11 மாவட்டங்களில் நிலவும் வரட்சியால், 5 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 61 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட மக்கள், வரட்சியால் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன், பயிர்ச் செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, குருநாகல்,பொலன்னறுவை, அநுராதபுரம், அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை,புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது வரட்சி நிலவுகிறது.

குடிநீர்ப் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு, பவுசர்கள் மூலம் குடிநீரைப் பெற்றுக் கொடுக்க, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.