ரயில்வே தொழிற்சங்கங்கள் 29ம் திகதி பணிப்புறக்கணிப்பில்…

அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சம்பள பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாமை காரணமாக ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பினை ஆரம்பிக்க உள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சம்பள முறைப்பாடு குறித்து இதற்கு முன்னரும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட ரயில்வே காப்பாளர்கள், சாரதிகள் உள்ளிட்ட நான்கு தொழிற்சங்கங்கள் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.