களனி வனவாசல பிரதேசத்தில் இன்று(26) அதிகாலை புகையிரம் ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
வனவாசல பிரதேச தெலகபான குறுக்கு வீதி அருகாமையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.