பொலன்னறுவை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நாளை(28) காலை 09 மணி முதல் மாலை 06 மணி வரை 09 மணி நேரம் நீர் விநியோகம் தடை படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை பிரதேசத்தில் மேற்கொள்ளவுள்ள வீதி புனரமைப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.