பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் பரீட்சையை திட்டமிட்டவாறு நடத்துவதற்கு தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் உப்புல் திசாநாயக்க தெரிவித்தார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீட கல்வி நடவடிக்கைகள் நேற்று(27) மீள ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் தற்போது பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெறுவதாகவும் உபவேந்தர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.