அமைச்சர் பைசர் ஐசிசி முன்னிலையில்…

இலங்கை கிரிக்கெட் இடைக்கால நிர்வாகம் தொடர்பில் மற்றும் கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாட சர்வதேச கிரிக்கெட் சபை அதிகாரிகளுக்கு அறியப்படுத்த விளையாட்டுத் துறை அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்ட குழுவொன்று ஐசிசி இற்கு செல்ல உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளில் ஒருவரான கமல் பத்மசிறி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் துணை சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஏஷ்லி டி சில்வா உள்ளிட்ட குழுவொன்று இவ்வாறு சர்வதேச கிரிக்கெட் சபை அதிகாரிகளை நாளை(29) சந்திக்க உள்ளனர்.