2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிகளில் இலங்கை அணியானது சிறந்ததொரு இடத்திற்கு வரும் என்று நம்புவதாக இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் குமார் சங்கக்கார நேற்று(27) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.
“உலகக் கிண்ணத்திற்கு இன்னும் காலம் உள்ளது. நான் நினைக்கிறேன் நமது வீரர்கள் அண்மைக் காலமாக சிறப்பாக விளையாடி வருகின்றது. நான் நினைக்கிறேன் சந்திக்க ஹதுருசிங்கவின் முறையான பயிற்சியினால் வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என நம்புகிறோம்.”