இலங்கை ரயில்வே திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளராக, ரயில்வே திணைக்களத்தின் உப பிரிவின் பிரதான பொறியியலாளர் எம். டிலந்த பெர்ணான்டோ நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் எதிர்வரும் 03ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.