கடற்படை லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத்திற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்…

இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சிக்கு (நேவி சம்பத்) எதிர்வரும் செப்டெம்பர் 12ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(29) உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் , 11 தமிழ் இளைஞர்களை வெள்ளை வானில் கடத்தி காணாமல்ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.