பெலியத்தை பிரதேசத்தில் வைத்து சாரதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்காளை – கொழும்பு தனியார் பேரூந்துகள் இன்று(29) காலை முதல் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்காளையில் இருந்து கொழும்பு, மாத்தறை, கிரிந்தை மற்றும் ஹக்மன ஆகிய பிரதேசங்களுக்கான தனியார் பேரூந்துகளே இவ்வாறு சேவையில் ஈடுபடாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
தாக்குதலில் காயமடைந்த பஸ் சாரதி தங்காளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, இன்று(29) காலை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.