நான் எப்போதும் கூறுவது முடியினை நோக்காது பந்தினை நோக்குமாறு.. – சச்சின் மாலிங்கவின் பிறந்தநாளுக்கு வாழ்த்தியது இப்படித்தான்…

இந்நாட்களில் லசித் மாலிங்க என்றாலே ரசிகர்கள் மத்தியில் அதிகளவு பேசப்படும் சரிதையாகவே காணப்படுகின்றது.

கடந்த 28ம் திகதி லசித் மாலிங்க தனது 35 வயதினை கொண்டாடியிருந்தார்.

அவரது பிறந்த தினத்திற்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கார் அவரது ட்விட்டர் தளத்தில் மாலிங்கவுக்கு பதிவொன்றினையும் வெளியிட்டிருந்தார்.

அதில், “மாலிங்கவுக்கு எதிராக துடுப்பாட்ட வீரர் ஒருவர் இருக்கையில் நான் எப்போதும் கூறுவது ஒன்றுதான்… அது தான் அவரது முடியினை பார்க்காது பந்தினை நோக்குமாறு.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்..” என பதியப்பட்டுள்ளது.