தெற்கின் கராபிட்டிய மருத்துவமனை, மாத்தறை பொது மருத்துவமனை, காலி மற்றும் மாத்தறை மாவட்ட மருத்துவமனைகளின் தாதியர் அதிகாரிகள் இன்று(31) காலை 7.00 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எஞ்சிய மேலதிக கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளையும் துரிதமாக வழங்கக்கோரி வலியுறுத்தியே இவ்வாறு ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது