இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை நடத்துவதற்கான கால எல்லையை எதிர்வரும் பெப்ரவரி 09 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் சபை சம்மதம் தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா, கிரிக்கெட் தகுதி வாய்ந்த அதிகாரியும் அமைச்சின் செயலாளருமான கமல் பத்மசிறி, கிரிக்கெட் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா மற்றும் பிரதி சட்டமா அதிபர் சுமதி தர்மவர்தன, அமைச்சரின் இணைப்பு செயலாளர் சில்மி ஆகியோர் ஐசிசி தலைவர் சஷங்க் மனோஹர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சட்சன் ஆகியோரை துபாயில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.