அனைத்து அரச பாடசாலைகளும் 03ம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று ஆரம்பம்..

நாடளாவிய ரீதியில் உள்ள சகல அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று (03) மீளவும் திறக்கப்படுகிறது.

இதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை நிலையங்களாகப் பயன்படுத்தப்பட்ட முஸ்லிம் பாடசாலைகளும் 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.