ஒன்றிணைந்த எதிர்கட்சியின் தீர்மானமிக்க கலந்துரையாடல் நாளை…

ஒன்றிணைந்த எதிர்கட்சித் தலைவர்கள் மற்றும் எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான சந்திப்பொன்று முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாளை(04) மலை இடம்பெறவுள்ளது.

கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் குறித்த இந்த சந்திப்பு மாலை 07.00 மணியளவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 05ம் திகதி நடத்தப்படவுள்ள பேரணி தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.