பெங்கமுவே நாலக்க தேரர், இத்தேகந்த சத்ததிஸ்ஸ தேரர், மாகல்கந்த சுதந்தர தேரர் மற்றும் மெடில்லே பஞ்சாலோக்க தேரர் ஆகியோருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
UPDATE _
மாகல்கந்த சுதந்தர தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்களும் நீதிமன்றில் சரண்…
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பெங்கமுவே நாலக்க தேரர், இத்தேகந்த சத்ததிஸ்ஸ தேரர், மாகல்கந்த சுதந்தர தேரர் மற்றும் மெடில்லே பஞ்சாலோக்க தேரர் ஆகியோர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டுக்கு அமைய மேற்குறிப்பிட்ட தேரர்களை கைது செய்து நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 31ம் திகதி காவற்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.