வறட்சியான காலநிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குருநாகல், அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு வவுனியா, கிளிநொச்சி, மன்னார், அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.