“மக்கள் பேரணி கொழும்புக்கு” இன்று(05) மாலை…

கொழும்பு நகரத்தின் செயற்பாடுகளை முடக்கி, அரசாங்கத்துக்கு சவால் விடும் வகையில், கூட்டு எதிரணி இன்று(05) கொழும்பில் பாரிய மக்கள் பேரணியை நடத்தவுள்ளது.

அமைதியான முறையில் தாம் இந்தப் பேரணியை நடத்தவுள்ளதாக கூட்டு எதிரணி தெரிவித்துள்ள போதிலும், அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் போன்ற முக்கியமான இடங்களை முற்றுகையிட்டு அவற்றின் செயற்பாடுகளை முடக்கும் இரகசியத் திட்டம் கூட்டு எதிரணியிடம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு காவல்துறை தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், சட்டத்தை மீறினால் கடுமையான நடவடிக்கையில் இறங்கும் என்றும் காவல்துறை மா அதிபர் எச்சரித்துள்ளார்.

எனினும் கூட்டு எதிரணி இந்தப் பேரணியை எங்கு நடத்தவுள்ளது என்று இன்னமும் அறிவிக்கவில்லை.