தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு இன்று…

28 நாடுகளில் இன்று(05) சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடைபெறவுள்ளது. இதன்படி இலங்கையில் முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் காலி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இந்த அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை இடம்பெறவுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப் பற்றி, அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் மற்றும் காலி மாவட்டத்தின் ஹிக்கடுவை ஆகிய இடங்களிலும் காலை 8.30க்கு இந்த முன்னெச்சரிக்கை பயிற்சி இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.