மாலபேயில் உள்ள நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை, இலங்கை விமானப்படையின் தேவைகளுக்காக எடுத்துக் கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் யோசணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்று(04) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ஜனாதிபதியின் இந்த யோசனை தொடர்பில் ஆராய்வதற்கு குழு ஒன்று அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனியாருக்கு சொந்தமான நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலை கடந்த வருடம் அரசாங்க வைத்தியசாலையாக மாற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.