மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசுவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பில்சன் எனும் நகரில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேர் உயிரியாந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பில்சன் நகரில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்