விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய பரிந்துரை…

விடுதலைப் புலிகள் மீளவும் தலை தூக்க வேண்டும் என்ற சர்ச்சைக்குறிய கருத்தினை வௌியிட்ட விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் விடுதலைப்புலிகள் குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் மேற்கண்டவாறு வெளியிட்ட கருத்து பெரும்  சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.