2018ம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் உலகின் 30 பிரதான கொள்கலன் வழிநடத்தல் துறைமுகங்களில் கொழும்பு துறைமுகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
அல்பா-லைனர் அறிக்கைகளுக்கு அமைய இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில் கொள்கலன் ஏற்றி-இறக்கல் மூலம் கொழும்பு துறைமுகம் 15.6 சதவீத வளர்ச்சியை எட்டியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டு;ள்ளது.
இதுவரை இந்த கொள்கலன்களை ஏற்றி இறக்கும் செயற்பாடுகளில் சிங்கப்பூர் துறைமுகமே முன்னிலை வகித்து வந்துள்ளதுடன், கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் இது 11 தசம் 6 சதவீத வளர்ச்சியையே காட்டியுள்ளது.
இதன்படி சிங்கப்பூர் துறைமுகம் 2ம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. 8.6 சதவீத வளர்ச்சியைக் காட்டும் கொன்சூ துறைமுகம் 3ம் இடத்தைப் பெற்றுள்ளது.
துறைமுகங்கள் மற்றும் சமுத்திர சேவைகளுடன் சம்பந்தப்பட்ட துறைமுக செயற்பாடுகள் முனைய வழிநடத்தல் செயற்பாடுகள், சேவை விநியோக நிலையங்கள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அல்பா-லைனர் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.