அவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையினை நடாத்தி செல்ல, 355 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொள்ளப்பட்டமை மற்றும் வழங்கியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவன்காட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோர் தாம் நிரபராதிகள் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் தெரிவித்தித்துள்ளனர்.
அதன்படி, அவர்களது குற்றச்சாட்டுக்கள் ஆராயப்பட்டு குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.