பாடசாலை மாணவர்களுக்கான சீருடைக்காக வழங்கும் வவுச்சரின் பெறுமதியை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது 550 ரூபா, 800 ரூபா, 1,000 ரூபா மற்றும் 1,350 ரூபா போன்ற பெறுமதியான வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், புதிய தீர்மானத்திற்கு அமைய இவற்றின் பெறுமதி அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருடத்திலிருந்து இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், அடுத்த மாதம் மாணவர்களின் சீருடைக்காக வழங்கப்படும் வவுச்சரின் பெறுமதி அதிகரிக்கப்படும் எனவும் திஸ்ஸ ஹேவாவிதாரன குறிப்பிட்டுள்ளார்.