சர்வதேச போதைப்பொருள் மன்னன் சித்தீக் ஹெரோயீன் வழக்கில் இருந்து விடுதலை…

சர்வதேச ரீதியில் போதைப்பொருள் வியாபாரியாக தெரிவிக்கப்படும் முஹமத் சித்தீக் எனப்படும் நபர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் ஐவர் தன்னகத்தே ஹெரோயீன் வைத்திருந்த குற்றச்சாட்டு வழக்கில் நிநிபந்தனையற்ற முறையில் விடுவிக்க, கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் விக்கும் களுஆராய்சசி இன்று(13) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

8.1 கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப் பொருள் வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு இடம்பெற்று வந்தமையும் கூறத்தக்கது.