இந்தியா சுற்றுப்பயணத்தில் பங்கேற்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று(13) இரவு 10.30 மணியளவில் இந்தியாவின் புதுடில்லி இலிருந்து ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் இற்கு சொந்தமான யூ.எல்.-196 என்ற விமானத்தில் தாயகம் திரும்பியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் இந்நாள் இந்திய பாராளுமன்ற லோக்சபா உறுப்பினர் சுப்ரமணியம் சுவாமியின் அழைப்பின் பேரில் அவர் இந்தியா சென்றிருந்தார்.
இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையே இருதரப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.