கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் இரண்டாக பிரிந்தது…

களுத்துரை இலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் ஒன்றின் பெட்டிகள் இரண்டு விலகியமையினால் கரையோர ரயில் சேவையில் தாமதம் நிலவியுள்ளது.

இன்று(14) காலை மொரட்டுவை ரயில் நிலைய அருகில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பின்னர் மீளவும் பெட்டிகள் இணைக்கப்பட்டு பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.