சாரதி அனுமதிப்பத்திர செயல்முறை பரீட்சைக்காக வௌி நிறுவனங்கள் இரண்டை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகன பரிசோதகர்களை இணைத்துக் கொள்வதை குறைப்பதற்கு இதனூடாக எதிர்பார்ப்பதாக குறித்த அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
சாரதி பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தும் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது சேவையில் உள்ள மோட்டார் வாகன பரிசோதகர்களிடம் இதற்கு எதிர்ப்பு வௌியாகியுள்ளதாகவும் தரகர்களை இதற்காக இணைத்துக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குறித்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி கூறியுள்ளார்.