பிரதமர், DIG நாலக டி சில்வா தொடர்பிலான முழுமையான விசாரணை அறிக்கையை கோருகிறார்..

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக டி சில்வா தொடர்பில் விசாரணை செய்து முழுமையான அறிக்கை ஒன்றை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக டி சில்வா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்வதற்கு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.