கிழக்கு மாகாணம், பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் ஏற்படக்கூடிய கடும் வெப்பத்துடன் கூடிய வானிலை காரணமாக, குறித்த மாவட்டங்களில் வாழும் மக்கள், அவதானமாக இருக்க வேண்டுமென, வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
மேலும் நிலவும் வெப்பநிலையானது இன்றைய தினம் (15) அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.