தற்போது காணப்படும் காலநிலையில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று(17) முதல் ஓரளவில் மாற்றம் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடு முழுவதும் காற்றுடன் கூடிய நிலை சற்று அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது
சப்ரகமுவ மாகாணத்திலும் மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாடு முழுவதும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.