பிணை நிபந்தனைகளை மீறியமையினால் புத்தளம் பிரதேச சபையின் தலைவர் அஞ்சன சந்தருவனை வழக்கு விசாரணை நிறைவுறும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று(17) உத்தரவு பிறப்பித்துள்ளது.
நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இவருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் இவர் கடந்த 10ம் திகதி வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திருந்த போது, கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.