நாளுக்கு நாள் இலங்கை ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி அடைந்து வருவதால் வாகனங்களது விலையில் அதிகரிப்பு நிலை ஒன்று உருவாகியுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்ச் தெரிவிக்கையில்;
Vitz, wagonR வகையான மோட்டார் வாகனங்கள் சுமார் இரண்டரை இலட்சம் ரூபா வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அதுதவிர அனைத்து வாகனங்களும் 2.5% – 5% இடையிலான வீதத்தில் விலை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.