ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று…

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்,
கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(20) இரவு 7 மணியளவில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் அதிகளவில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று(19) நடைபெறவிருந்த மத்திய செயற்குழு கூட்டம் இன்று(20) வரை ஒத்திவைக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.